Wednesday, July 29, 2015

கலாவினோதன் சின்னமணி ஐயா.........
Kalairuban Kanapathipillai's photo.





















மாதனையில் உதித்தாய்
மனைபுகுந்தாய் அச்சுவேலியில்
அன்பர்களின் ஆசிபெற்று
ஆங்கில ஆசிரியரானாய்
திருப்புங்குடி ஆறுமுகத்தின்
திருப்திநிறை காஷ்யக் கலைஞன் - நீ
கலைச்சிறப்பாலும் கலைத்திறனாலும்
கலைவாணரிடம் கலைபயின்றாய்
ஆற்றலின் வேகத்தால்
ஆற்றுகைக் கலைபுகுந்தாய்
சந்நிதியில் சாதனை கொண்டு
சான்றோர்கள் மத்தியில் நின்று
இதிகாசம் புராணம்
இராமாயணம் பாரதம்
நீதிநூல் திருக்குறள்
நாளடியார் நாளைய கதையென
இலக்கியததை இன்சுவையாய்
இலங்கை இந்தியா சிங்கபூர் மலேசியா கனடா சுவிஸ் என
உலகத்திற்கு உரைத்துநின்ற
உலகம்போற்றும் உத்தமன் - நீ
வில்லிசைக்கோர் வித்தகன்
தெ;ள்ளுதமிழ் சொல்லெடுத்து
தித்திக்கும் வில்லிசையால்
திக்கெட்டும் உன்குரல் கேட்க வைத்தவன் -நீ
உம்பட்டங்கல் பலஉள
அவற்றில் சிலஇவை
வில்லிசை வேந்தன், வில்லிசைச் சக்கரவர்த்தி,
வில்லிசைத் திலகம், வில்லிசைப் புலவர்
வில்லிசைப் பேரொளி பல்கலை வேந்தன்,
முத்தமிழ் மாமணி, முத்தமிழ் வித்தகன்,
நவரசக் கலைஞன் ஜனரஞ்சக நாயகன், என,
உம்பிரிவால் உளம்வாடி
உம்மையே தினம்நாடும்
 சிஷ்யன்
நா. மதியழகன்
உம்பணியை நாம்தொடர்வோம்






No comments:

Post a Comment